பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று BED யில் 50% மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் TNTET PAPER II (Teacher Eligihility Test Certificate) பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 53 (பொதுப் பிரிவினர்) 58(இட ஒதுக்கீட்டில் அடங்கும் ஆதரவற்ற விதவை உட்பட அனைத்து பிரிவினருக்கும்). இதர தகுதிகளின் விவரங்களை (http//www.trb.tn.gov.in என்ற இணையதன் முகவரியில் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு உதவும் வகையில் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test); வாரத்தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளதால் 10.11.2023 தேதிக்குள் நேரிலோ அல்லது Google Link https//formsgle:FNHXWyiuCraG1AoL8 வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...