ஊராட்சி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சி சார்பில் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, உள்ளிட்ட உபாதைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.



கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.



இதில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மைய மருத்துவர்கள் பாரதி, முத்துக்குமார் ஆகியோர் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, கால்பாத உணர்ச்சி இன்மை, கால்பாத எரிச்சல், இடுப்பு ஜவு விலகல் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



மேலும் முகாமில் இலவசமாக பல் பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூபாய் 1500 மதிப்பு எலும்பு சத்து பரிசோதனை 50 ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம், துடியலூர் லட்சுமி மருத்துவ மனை, வாசன் ஐ கேர், பி.வி.கே. டெண்டல் கேர், மற்றும் துளசி பார்மஸி உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு மருத்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி கவுன்சிலர் வளர்மதி, உள்பட சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...