ஊராட்சி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சி சார்பில் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, உள்ளிட்ட உபாதைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.



கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.



இதில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மைய மருத்துவர்கள் பாரதி, முத்துக்குமார் ஆகியோர் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, கால்பாத உணர்ச்சி இன்மை, கால்பாத எரிச்சல், இடுப்பு ஜவு விலகல் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



மேலும் முகாமில் இலவசமாக பல் பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூபாய் 1500 மதிப்பு எலும்பு சத்து பரிசோதனை 50 ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம், துடியலூர் லட்சுமி மருத்துவ மனை, வாசன் ஐ கேர், பி.வி.கே. டெண்டல் கேர், மற்றும் துளசி பார்மஸி உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு மருத்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி கவுன்சிலர் வளர்மதி, உள்பட சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...