ஒரே நேரத்தில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு - சீர்வரிசையாக ஊட்டச்சத்து பொருட்கள்

கோவையில் ஏழை எளியகர்ப்பிணி தாய்மார்கள் 108 பேருக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.


கோவை: எளிய கர்ப்பிணி பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அலையன்ஸ் கிளப், பசுமை நிழல் அறக்கட்டளைகள் மற்றும் தமிழ்செல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்கள் 108 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



பாரம்பரிய முறைப்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6 வகையான அறுசுவை உணவுடன் கண்ணாடி வளையல்கள், வளைகாப்பு சீதனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மஞ்சள் பூசி சடங்குகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணித்தாய்சௌமியா ஸ்ரீ கூறும்போது,



சாதி பேதம் இன்றி கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது வரவேற்கத்தக்கது. இதுபோல் கோவையில் எங்கும் நடைபெற்றது இல்லை. வீட்டில்நடைபெறுவது போல சடங்குகள் செய்யப்பட்டு சீதனங்கள் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

இது குறித்து பசுமை நிழல் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகி விஜயகுமார் பேசும் போது,



வளைகாப்பு நடத்த முடியாமல் இருக்கும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களுடன், தாய் வீட்டு சீதனம் பசுமை நிழல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...