சீல் வைக்கப்பட்ட கரி தொட்டி ஆலை இயக்கம் - உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் சீல் வைக்கப்பட்ட கரி தொட்டி ஆலையை மீண்டும் இயங்கியதை கண்டுபிடித்த அதிகாரிகள், ஒரு மணி நேரத்தில் ஆலையை காலி செய்யவிட்டால், உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி, முறைகேடாக இயங்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் கிராமத்தில் அருள்முருகன் ஏஜென்சி என்ற பெயரில் சிதம்பரசாமி என்பவருக்கு சொந்தமான தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. அப்பகுதி முழுவதும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், நீர்நிலைகள் மாசு அடைவதாகவும், மூச்சுத் திணறல், சுவாச கோளாறு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதாகும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திய நிலையில் கடந்த ஒரு வருங்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த கரி தொட்டி ஆலைக்கு சீல் வைத்து மீண்டும் இயக்க தடை விரித்தனர்.



இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் கரி தொட்டி சுடும் ஆலை இயங்கி வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு வருடத்திற்கு முன்பு சீல் வைக்கப்பட்ட ஆலை மீண்டும் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.



இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆலையை காலி செய்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்காவிட்டால் உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் தேங்காய் தொட்டி சுடும் ஆலைகளை இயக்கக் கூடாது எனவும் கட்டிட அனுமதி வழங்கக்கூடாது எனவும் ஏற்கனவே அப்பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட ஆலை மீண்டும் இயங்கி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற ஆலைகளை இயக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...