உடுமலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

உடுமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்தவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த தகவலையடுத்து, தலைமை காவலர் பத்ரா அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த சிவலிங்கம் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ அளவில் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவருக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு உறுதியாக இருந்த ஏரி பாளையத்தைச் சேர்ந்த தியாகு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...