சமூக விரோதி கூடாரமாக மாறிய உக்கடம் பேருந்து நிலையம்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

உக்கடம் பேருந்து நிலையத்தில் அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: சமூக விரோதிகளின் கூடரமாக உக்கடம் பேருந்து நிலையம் மாறியுள்ளதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரத்தில் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பயணிக்க தினந்தோறும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடைய பேருந்து நிலையம் முழுவதும் மாநகராட்சி பராமரிப்பு இல்லாமல் தூசி காடாகவும், குப்பை மேடாகவும் காணப்படுகிறது.



அதே போல அங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழல் குடையை, தனியார் கடைகள் ஆக்கிரமித்து சமூக விரோத மது கூடாரமாக மாற்றியுள்ளனர். இங்கு தினந்தோறும் இரவில் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வரும் மக்கள் முகம் சுழிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...