உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா - பரதநாட்டியம் அரங்கேற்றம்

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவில் மாணவ,மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. இதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மக்கள் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: நவராத்திரி திருவிழாவில் கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி கொழுவிழா கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்கியது.



தினமும் ஒரு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று ஏழாவது நாளில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன. கொழு கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.



மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...