சாதி பாகுபாடு காட்டும் மாவட்ட வேளாண் இயக்குநர் - உற்பத்தி குழு உறுப்பினருமான திமுக நிர்வாகி புகார்

கோவை மாவட்ட வேளாண் இயக்குநர் சாதி ரீதியாக செயல்படுவதாக மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினரும், திமுக பிரமுகருமான திப்பம்பட்டி ஆறுசாமி குற்றச்சாட்டியுள்ளார்.


கோவை: உரம் கையிருப்பு உள்ளதை கண்டுபிடித்து கூறிய காரணத்தினால், தன்னை தன்னை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக திப்பம்பட்டி ஆறுசாமி புகார் தெரிவித்துள்ளார்.



திமுக ஆதிதிராவிடர் மாநில இணை செயலாளராக இருப்பவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி. இவர் மாவட்ட வேளாண்மை உற்பத்தி குழுவில் உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வேளாண் உற்பத்தி குழுவில் இவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கேட்ட பொழுது பழைய நிர்வாகிகளுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்ததாகவும், ஆனால் அதில் பரமசிவம் என்பவருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேசமயம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேறுயாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.



அப்போது இவரும் இவரது ஆதரவாளர்களும் இச்செயலுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தான் காரணம் என கூறி கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழக்கங்களை எழுப்ப கூடாது என்றனர்.



இது குறித்து ஆறுச்சாமி கூறுகையில், நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பை சார்ந்தவன். தற்போது வேளாண்மை உற்பத்தி குழுவில் புதியதாக பொறுப்பு போடப்பட்டுள்ளது என்பது சாதி ரீதியான தாக்குதல். மேலும் தான் 1977ல் இருந்து திமுக வில் உறுப்பினராக இருந்து தற்போது ஆதிதிராவிடர் மாநில இணை செயலாளராக இருக்கிறேன் என தெரிவித்த அவர், தான் ஒரு பேச்சாளர் எனவும் முதலமைச்சரின் மக்கள் திட்டங்களை கிராமம் கிராமமாக சென்று எடுத்துரைத்து வரும் எனது குரலை குறைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் எனக்கு அளித்து வரும் அங்கீகாரத்தை அதிகாரிகள் சாதி ரீதியாக பிடிக்காமல், திட்டமிட்டு என்னை வெளியேற்றி உள்ளனர் என கூறினார். மேலும் இங்குள்ள அதிகாரிகள் சாதி ரீதியாக செயல்படுகிறார்கள் என்பது தன் வேதனை அளிக்கிறது என்றார்.

வேளாண் உற்பத்தி குழு மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனையை தாம் எடுத்து கூறும் போது அப்போதைய மாவட்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கை எடுக்கும் படி கூறுவார் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கின்ற போதும் அதிகாரிகள் செய்கின்ற தவறுகளை தாங்கள் சுட்டிகாட்டுவோம் எனவும், தற்போது உரம் கையிருப்பு இல்லை என அதிகாரிகள் சாதித்த நிலையில் உரம் கையிருப்பு உள்ளதை கண்டுபிடித்து நாங்கள் கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக வேளாண் PA மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரும் தன்னை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...