கோழிப்பண்ணையில் பணியாற்றிய ஆறு சிறுவர்கள் அதிரடியாக மீட்பு

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் சிறார்கள் பணியாற்றுவதுவதாக புகார் வந்ததை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு மேற்கொண்டதில் 6-சிறார்களை மீட்கப்பட்டனர்.


திருப்பூர்: குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பெல்லம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 6-குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களின் குழந்தைகள் அதேபண்ணையில் பணியாற்றுவதாக 1098-எண்ணுக்கு புகார் வந்தது இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மையம் அலுவலர்கள் மற்றும் குண்டடம் போலீசார் அங்கு கள ஆய்வு செய்தனர் அதில் 13-வயது முதல் 17-வயது வரை உள்ள 6-சிறார்கள் கடந்த 2 -மாத காலமாக பணியாற்றிவந்தது தெரியவந்ததை உறுதி செய்தனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.280 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறார்களை மீட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தாய்மொழி பள்ளிகள் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர் இதையடுத்து குடும்பத்தினர் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...