நாளை திறப்புவிழா காண்கிறது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்: முதலமைச்சர் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக அவ்வளாகத்தில் காலியாக இருந்த இடம் ஒதுக்கப்பட்டு, அதில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், புதிய கட்டிடத்திற்கா சுமார் 20.18 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன. 

கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் தமிழக அரசியல் காரணங்களால் திறப்புவிழா நடத்த காலதாமதமானது.  இந்த நிலையில், நாளை புதிய கட்டிடம் திறக்கப்ப்ட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாளை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கும் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அவருடன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தமிழக அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 



விழா முடிந்ததும் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் முதலமைச்சர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைப்பதோடு, 6 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட் உதவிகள் வழங்க உள்ளார்.

முதலமைச்சர் கோவை வருகையை ஒட்டி கோவை தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...