கோவையில் புதியதாக கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் - எம் பி நடராஜன் திறந்து வைத்தார்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து நகர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச் சுவரினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: கோவையில் சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவரை திறந்து வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டார்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து நகர் பகுதியில் நாடாளு உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச் சுவரினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதே போல் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஆர்.ஜி நகர் புதிய ரேசன்கடையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர்.



கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வது 9வார்டு முத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோவில் பகுதியில் அதற்கான சுற்றுச் சுவர் அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் ஒதுக்கி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.



இதன் திறப்பு விழாவானது நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் தலைவர் மரகதம் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

சிறுவர் பூங்கா சுற்றுச் சுவற்றினை பாராளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜனுக்கு முத்துநகர் பொதுநல சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.



இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராமதாஸ், செயலாளர் தேவராஜ், ஆலோசகர் பாஸ்கரன், ஆலய பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதரன், வார்டு உறுப்பினர் சித்ரா மற்றும் முத்து நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் சுந்தரராஜன் நன்றியுரை வழங்கினார்.



அதேபோல் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஆர்.ஜி நகர் புதிய ரேசன்கடையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுகுழு உறுப்பினர் வீரபத்திரன், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...