வால்பாறையில் மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பேருந்து - சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார்

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், உயர் அழுத்த மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கல்லூரி பேருந்து மோதிய மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த விபத்தால், வால்பாறை நகரமே இருளில் மூழ்கியது.



கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மேல் மோதியதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் முன் கூட்டியே இறங்கியதால் பதிப்பு இல்லை. பேருந்து ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பினார். இந்த விபத்தின் காரணமாக இந்த வழியில் செல்ல கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து செல்ல முடியாமல் உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.



இதன் காரணமாக நடுமலை, பச்சமலை, கருமலை, அக்காமலை, போன்ற எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் நடந்து சென்று எதிரே வரும் வாகனத்தில் செல்கின்றனர்.



மின் கம்பதை அகற்றி போக்குவரத்தை சரி செய்வதற்கு காவல் துறையின் மின் துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...