மூலனூர் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் சுற்று ட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.

மூலனூர் சுற்று–வட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண்மைதுறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய எண்ணை வித்து பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்று நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வேம்பு பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.17 ஆயிரம் மற்றும் புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம், இலுப்பை பயிருக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் என மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் நடவு செய்தது முதல் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்கள் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...