2017- 18 ஆண்டிற்கான தமிழக பட்ஜட்டை வரவேற்பதாக சைமா தலைவர் கே.கே.ராஜன் தகவல்

தமிழக அரசின் 2017- 18 ஆம் ஆண்டிற்கான பட்ஜட் வெளியீடானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழக அரசிற்கு சைமா சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 7 ஆயிரம் கோடி கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்நாட்டில் விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட்டிகளின் விற்பனை அதிகரிக்கும்.

மேலும், புதிய தொழில்முனைவோர் இணையதளம் மூலம் கடன்பெறும் திட்டத்தின் மூலம் அவர்களது வேலைப்பளு மற்றும் நேரம் விரையமாவது குறையும்.

தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும். கோவை மாநகரத்திற்கும் சிறப்பு கவணம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை நிறுவ மற்றும் ஒருவழித் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதி கொடுக்கும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரத்யேக சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக வளாகங்களை அமைக்க வேண்டும் என தனது அறிக்கையின் மூலம் சைமா தலைவர் கே.கே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...