உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சொற்பொழிவு போட்டி நடைபெற்றது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி நடைபெற்றது. பள்ளி தமிழ் இலக்கிய மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சட்டமன்ற நாயகர் கலைஞரின் சட்டமன்ற சாதனைகள் குறித்த பள்ளி அளவிலான சொற்பொழிவுப் போட்டியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டியின் நடுவர்களாக தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர். ராஜேந்திரன், முதுகலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

சொற்பொழிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவிகள் ச. தேன்மொழி முதலிடமும், சா கவியரசி 2-ம் இடமும் அ.கார்த்திகா 3-ம் இடமும் பெற்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...