தாராபுரம் அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா - மாணவர்கள் ஆர்வம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


 திருப்பூர்: மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ரா. சிவசாமி வரவேற்று பேசினார்.



முத்தூர் கருப்பணன் மாரியப்பபன் கல்லூரியின் ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் அ.அமிர்தலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொழி-வாழ்க்கை இயக்கியார் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி மா.தனலட்சுமி ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகள் செ.அஸ்வினி, ரா.தீபிகா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக முதலாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி மகமுதா இர்பானா நன்றி கூறினார்.

ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளர்கள் ர.ஹர்ஷ் தபே, கார்த்திகேயன், போ.சுதாகர் மற்றும் ம.சந்தியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...