உடுமலை அமராவதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுபகுதியிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.

இதன்மூலம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...