வாகன பதிவெண்களை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமிரா தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடரும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: வாகன பதிவெண்களை துல்லியமாக காட்டும் அதிநவீன கேமரா தொழில்நுட்பம் கோவையில் நடைமுறைக்கு வந்தது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவில் "அதிநவீன சிசிடிவி கேமரா" தொழில்நுட்பம் தொடர்பான அறிமுக விழா நடைபெற்றது.



இதில், மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் சந்தீஷ், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவாணீஷ்வரி, துணை தலைவர் சரவண சுந்தர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இந்த அதிநவீன கேமரா தொடர்பான தகவல்களை விளக்கினார். முதற்கட்டமாக, அரசு அலுவலகங்களை மையப்படுத்தி ரூபாய் 34 லட்சம் மதிப்பில் 110 அதிநவீன கேமரா தொழில்நுட்பம் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.



இந்த கேமரா எவ்வாறு உதவியாக இருக்கும், எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பெரிய திரையில் விளக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



அரசு அலுவலகங்களை மையப்படுத்தி சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்களின் பதிவெண்களை தெளிவாக எடுக்கும் வகையிலும், இரவு நேரங்களில் அடையாளம் காணக்கூடிய வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராக்களின் பதிவுகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பாடும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மேலும், குற்றம் நடக்கும் நேரத்திலேயே வாகனங்களை பின் தொடருதல், குழந்தைகள், வயதானவர்கள் காணாமல் போனால், அவர்களின் உடை மூலம் உடனடியாக கண்டறியவும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதுமட்டுமின்றி முகங்களில் ஏற்கனவே பதிவான குற்றவாளிகளின் முகங்கள் தென்பட்டால் அதையும் ஒரே நேரத்தில் இந்த திரையில் காட்டும் வகையில் தொழில்நுட்பம் உள்ளதாகவும் கூறியவர், அடுத்தக்கட்டமாக 100 கேமராக்கள் அடுத்த ஓராண்டில் பொறுத்த திட்டமிட்டுள்ளாதாகவும், குற்றத்தை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் இந்த கேமராவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றார்.

தற்போது வரை கோவை மாநகர காவல்துறையில் 25,000 கேமராக்களில் 14,800 கேமராக்கள் சாலையை நோக்கி பொருத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த அதிநவீன கேமராக்களின் பதிவுகள் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளும் வசதி கொண்டதாகவும், ஏற்கனவே, சோதனை முயற்சியின் போது 2 வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...