100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த கோரிக்கை- கோவை அருகே பெண்கள் போராட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டிருப்பதை கண்டித்தும் 100 நாள் வேலையை 200 நாளாக அமல்படுத்த கோரியும் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே வி தனபால் தலைமை தாங்கினார்.



கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஆர் செல்வராஜ், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் R. கேசவ மணி அவர்களும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் கட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் ஏ. ஆர்.துரைசாமி சுப்பிரமணியம் , கோகுல் கிருஷ்ணன் மற்றும் 77 விவசாயம் பெண் தொழிலாளர் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...