அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மிதிவண்டி போட்டிகள் - தேதி அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 14ஆம் தேதி கோவையில் மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெறும் மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 14ஆம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் கோவை புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு துவங்கி ஆர்டிஓ அலுவலகம், CBM கல்லூரி வழியாகச் சென்று மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்.

இப்போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை மாவட்ட பிரிவு மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 10 கிலோமீட்டர், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர் என நடத்தப்பட உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000, நான்கு முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ. 250 ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...