தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க வேண்டும் - கோவையில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், "சுமார் 1000 சதுரடி வரை வணிக நோக்கத்தோடு கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வர வேண்டும், சுமார் ஆறு அல்லது எட்டு வீடுகள் வரை உள்ள கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு கொடுப்பதற்கு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இயக்கத்தின் தலைவர் சாக்ரடீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கும் வணிக கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதில் நீதிமன்ற தடை இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...