திருச்செந்தூர் குழந்தை கடத்தல் - கடத்தி சென்ற பெண் உயிரிழப்பு?

திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: திருச்செந்தூரில் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட கணவன், மனைவி கைது.

கடந்த 5ம் தேதி திருசெந்தூர் வடக்கு டோல்கேட் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் ஒன்றரை வயது திருடப்பட்டது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலிசார்க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடியாகக் கோவை ஆலாந்துறை போலிசார்க்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் ஆலாந்துறை போலிசார் பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி(35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது காவல்துறையினர் சேலம் விரைந்துள்ளனர். மேலும் திருச்செந்தூர் காவல்துறையினரும் சேலம் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் திலகவதி தற்போது உயிரிழந்துள்ளார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...