தாராபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை பணி - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

தாராபுரம் நகராட்சி 4-வது வார்டு பகுதியில் பல ஆண்டு காலமாக மக்கள் சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என அவர் கூறினார்.

அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராஜாத்தி பாண்டியன், 4-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், வார்டு அவைத்தலைவர் சென்னியப்பன், வார்டு பிரதிநிதிகள் ஆறுச்சாமி, மகாலட்சுமிரத்தினம், வாக்குச்சாவடி முகவர் குணசேகரன், பெரியசாமி, பாலகிருஷ்ணன், முனியப்பன், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...