மாநகராட்சி வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 8 வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசித்து வரும் பிரான்சிஸ் சேவியர், நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.11,010 மற்றும் வார்டு 84-ல் நாடார் தெருவில் வசித்து வரும் ராஜமாணிக்கம் நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.6,862 மற்றும் குடிநீர் கட்டணம் ரூ.27,740 ஆகியவை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, வார்டு 45-ல் கண்ணுசாமி கவுன்டர் தெருவில் வசிக்கும் சாந்தாமணி நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.15,753, வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசிக்கும் கே.பி.குஞ்ராமன் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.14,815, வார்டு 49-ல் பொங்கியம்மாள் தெருவில் வசிக்கும் மனோரஞ்சிதம் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.9,397 ஆகியவற்றை செலுத்தாததாலும், வார்டு 53-ல் தனலட்சுமி நகரில் வசிக்கும் என்.பழனிச்சாமி குடிநீர் கட்டணம் ரூ.8,489, வார்டு 53-ல் ஆவாரம்பாளையம் சாலையில் வசிக்கும் வேணுகோபால் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.4,366 மற்றும் வார்டு 54-ல் விவேகானந்தா சாலையில் வசிக்கும் சேமியல் நாடார் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.5,220 ஆகிய வரிதாரர்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியும், வரிகள் செலுத்தாத காரணத்தினால் மேற்படி வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...