கறிக்கோழி விற்பனை சரிவடைவதால், கொள்முதல் விலை சரியும் பண்ணையாளர் அச்சம்

புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை சரிந்து வருவதால் கொள்முதல் விலை விழ்ச்சி அடையும் ஆபத்து இருப்பதாக கோவை, திருப்பூர், ஈரோடு கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்


கோவை: கறிக்கோழி விற்பனை சரிவு கோழி பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில், கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம் ஒரு கோடி கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும், வாரம், 50 லட்சம் கோழிக்குஞ்சுகள் விற்பனையாகி வருகின்றன.

கேரளாவில், தொடர் மழை காரணமாக, 20 சதவீதம் வரை கறிக்கோழி விற்பனை சரிவடைந்து வருகிறது. இதுதவிர, விழாக்கள், பண்டிகைகள் காரணமாகவும் விற்பனை குறைந்துள்ளது. தமிழகத்தில், புரட்டாசி மாதம் என்பதால், அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவும் விற்பனை குறைவதற்கான காரணமாக உள்ளது.தற்போது, கொள்முதல் விலை, கிலோ 108 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ளதால், அதற்கு ஏற்ப உற்பத்தியும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவு காரணமாக, வரும் நாட்களில் கொள்முதல்விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போதுள்ள தீவன விலை, ஆள் கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், கறிக்கோழிகளின் அடக்க விலை, 100 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. கொள்முதல் விலை மேலும் குறைந்தால், பண்ணையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர் அச்சம் தெரிவித்தார்

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...