108 அவசர ஊர்திக்கு வழி விடாத தனியார் பேருந்திற்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்

கோவை உக்கடத்தில் இருந்து சின்ன தடாகம் செல்லும் தனியார் பேருந்து தட எண்- 85 வாகனத்தின் உள்ளே அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.



ரயில் நிலையம் அடுத்து பேருந்து முன்னே சென்று கொண்டிருந்தபோது பின்னால் 108 அரசு ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடியே வந்தது.

அதிக சத்தத்துடன் பாடல் பேருந்தின் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்ததால் வாகன ஓட்டுனர் சுகதேவ் இதுபற்றி தெரியாமல் அவசர ஊர்திக்கு வழி விடாமல் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி தனது இரு சக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தி விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே போல் சுங்கம் பகுதியில் தனியார் பேருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...