தண்ணீரில் மிதக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி - அச்சப்பட தேவையில்லை என கோவை ஆட்சியர் விளக்கம்

செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது சில அரிசி மிதந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: செறிவூட்டபட்ட அரிசி தண்ணீரில் மிதந்தால் அச்சப்பட வேண்டாம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடந்த மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியின் விகிதாசாரமானது 1:100 விகிதத்தில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகளை 100 கிலோ பொது விநியோகத்திட்ட புழுங்கல் மற்றும் பச்சரிசியுடன் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது.

மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் -பி12 ஆகியவை கலந்து திரும்ப அரிசி குருணை வடிவில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்தினால் இரத்த சோகையினைத் தடுக்கவும், போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திற்கும், வைட்டமின்-பி12-ல் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் நன்மை ஏற்படுத்துகிறது.

மேற்படி செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்ட பொதுவிநியோகத்திட்ட அரிசி சமைப்பதற்கு தண்ணீரில் ஊற வைக்கும் போது, செறிவூட்டப்பட்ட அரிசி சில தண்ணீரில் மிதப்பதால் பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை. இவை அடர்த்தி மற்றும் எடை குறைவு காரணமாகதான் மிதக்கின்றன. எனவே, இவை ஊட்டசத்து நிறைந்தவை என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...