கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரியினங்கள் செலுத்துதல் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், பாலுாட்டும் அறை இல்லாததால் தாய்மார்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் நடந்தது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சென்ற நிலையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் சிரமப்பட்டதை அறிந்து, மேடைக்கு பின்புறம் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிலையில், அலுவலக வளாகத்தில் இருக்கும் பொது மக்கள் காத்திருப்பு அறையில், கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...