பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் - விவசாயிகளுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-24 ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட 2016-17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி தற்போது விவசாயிகள் ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சோளம் மக்காசோளம் மற்றும் கொண்டைகடலை பயிர்களுக்கு தற்போது அறிவிக்கை பயிர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வருடம் யுனிவர்சல் சாம்போ பொதுக்காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆகவே,கோவை மாவட்ட விவசாயிகள் அக்டோபர் 2023 முதல் சாகுபடி செய்யப்படும் சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.144.75/- கட்டணமாக செலுத்தி 15.12.2023 வரையிலும், கொண்டை கடலைபயிருக்கு ஏக்கருக்கு ரூ.210/- செலுத்தி 15.11.2023 வரையிலும் மற்றும் மக்காசோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.519.75/- கட்டணமாக செலுத்தி 15.11.2023 இறுதிவரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்காக விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் எண் அட்டைநகல், வங்கிகணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியஆவணங்களுடன் பொது இ- சேவைமையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு, கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்காப்பீட்டிற்கான பிரிமியத் தொகையினை செலுத்தி பதிவு செய்யலாம்.

மேலும் பயிர்காப்பீடு தொடர்பான விவரங்களைப் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...