உடுமலையில் கல்விக் கடன் வழங்க கோரி சென்ட்ரல் பேங்க் முன்பு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

உடுமலையில் மாணவனுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த சென்ட்ரல் வங்கி முன்பு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: கல்விக் கடன் வழங்காமல் ஒருவடத்திற்கு மேல் அலைக்கழித்துள்ளதால் மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணம நாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்த அமுத பாரதி என்ற மாணவன் கோவை கற்பகம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்விக் கடன் கேட்டு உடுமலையில் உள்ள சென்ட்ரல் வங்கியில் விண்ணப்பித்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் வங்கி நிர்வாகம் இன்று போய் நாளை வா இன்று போய் நாளை வா என தொடர்ந்து அலைக்கழித்துள்ளது.

இதனால் அந்த மாணவன் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோருடன் 50க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் வங்கியின் முன்பு கல்விக்கடன் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஒரு வருடத்துக்கு மேலாக கல்வி கடன் வழங்காமல் வங்கி நிர்வாகம் மாணவனுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே கல்விக்கடன் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...