செம்மிபாளையத்தில் கிராம சபை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், சார்ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பது குறித்தும், ஊராட்சியின் வரவு செலவு ஆவணங்களை சரி பார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மகளிர் சுய உதவி குழுவினருக்கும்,உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கும், கடன் உதவி தொகை வழங்கினார்.



மேலும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...