வால்பாறையில் தொடர் மழை - இரண்டு வீடுகள் இடிந்து சேதம்

வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை வால் பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து இரண்டு வார காலமாக தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருகிறது .

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக படிக்கட்டுகள் தடுப்பு சுவர்கள் சேதமடைகின்றன.

இந்நிலையில் வால்பாறை நகரை ஒட்டி உள்ள அண்ணா நகர் பகுதியில் அமுதா என்பவரின் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பக்கத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீடும் சேதமடைந்தது.



இதனால் இரண்டு வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித சேதம் இன்றி தப்பினர்.



தகவல் அறிந்த வால்பாறை நகரமன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் நகர கழக செயலாளர் சுதாகரன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...