ஆம்னி வேனில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - தாராபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வேனில் குட்கா கடத்தி நபரை கைது செய்து 48 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஆம்னி வேனில் கடத்தி வந்த குட்கா பொருள்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் தாராபுரம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது ஆம்னி வேன் ஒன்று தாராபுரம் நோக்கி மிக வேகமாக வந்தது.

அதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் பண்டல், பண்டலாக கட்டுகள் இருந்து தெரியவந்தது.

வாகன ஓட்டுனரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.



அப்போது தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விற்பனைக்காக குட்கா பொருடகளை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.



விசாரணையில் தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்த அண்ணாசாமி மகன் செல்லப்பாண்டி (24) என தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து 48-கிலோ குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த பின்னர் செல்லப்பாண்டியை போலீசார் உடுமலைப்பேட்டை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...