கோவையில் வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு மானியவிலையில் தீவனம்- மாவட்ட ஆட்சியர்

கோவையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி விவசாயிகளது கால்நடைகளும் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றிற்கு தமிழக அரசு மானிய விலையில் தீவனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காரமடை, அன்னூர், பொகலூர், பெரியநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, வெங்கிட்டாபுரம், கிணத்துக்கடவு மற்றும் இராமநாதபுரம் ஆகிய பத்து கால்நடை மருத்துவ நிலையங்களில் உலர் தீவன கிடங்குகளை நிறுவியுள்ளது.

வறட்சி நிலை சீராகும் வரை ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம், அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை விவசாயி ஒருவருக்கு உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவனக் கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருத்துவ நிலைய கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயனடையலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...