நிறுவப்படாத அம்பேத்கர் சிலை - கோவை ஆட்சியரிடம் ஒற்றுமை மேடை சார்பில் மனு

மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் சிலை நிறுவப்படாத நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி பொதுக் கூட்டத் தீர்மானத்தில் கோவை மாவட்டத்தின் மையப் பகுதியான நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ஆனால் இதுவரை அம்பேத்கர் சிலை நிறுவப்படவில்லை என்பதால் உடனடியாக அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இது குறித்து மனு அளிக்க வந்த ஒற்றுமை மேடை அமைப்பினர் கையில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...