பிரபல வனவிலங்கு ஆர்வலர் எஸ்.ஜெயச்சந்திரன் உதகையில் மாரடைப்பால் மறைவு - அவருக்கு வயது 65

பிரபல பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான எஸ்.ஜெயச்சந்திரன் 65, மாரடைப்பால், உதகையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.


உதகை: நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் பணியாற்றிய எஸ்.ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் நிலப்பரப்புகளின் காடுகளையும் வனவிலங்குகளையும் சுமார் 30 ஆண்டுகளாக பாதுகாக்க பாடுபட்டார் எஸ்.ஜெயச்சந்திரன்.

அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் (TNGM) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது நீலகிரியில் தொழில்துறையின் வருகை மற்றும் மர மாஃபியாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.

இதனையடுத்து, நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் அவர் பணியாற்றினார். இந்நிலையில்,உதகையில் உள்ள இல்லத்தில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...