தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திரளாக நிர்வாகிகள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், நகர் மன்ற செயலாளர் பொறியாளர் முருகானந்தம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தனசேகர், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா, திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...