பெரியாரின் பிறந்தநாள் - கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


கோவை: கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது புகைபடம் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் பெரியாரின் ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள், அரசியல் கட்சியினர் பெரியாரின் படங்களுக்கும் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பிலும் இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில் கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



சமூக நீதி நாளை கொண்டாடும் வண்ணம் நடைபெற்ற இந்த கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



சிவானந்த காலனியில் துவங்கிய இந்த பேரணி கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக பெரியார் படிப்பகத்தில் முடிவடைந்தது.



இந்தப் பேரணியில் சமூக நீதியை குறித்தான முழக்கங்கள் எழுப்பட்டன.



மேலும் பேரணி முழுவதும் நிமிர் குழுவினரின் பறை இசை இடம்பெற்றது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...