துடியலூரில் எமன் வேடமணிந்து வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே எமன் வேடமணிந்த கல்லூரி மாணவர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



கோவை: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு கார்டுகளை மாணவர்கள் கொடுத்தனர்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே துடியலூர் போக்குவரத்து துறை, அலார்ட் தொண்டு நிறுவனம் மற்றும் போர்ட் மோட்டார் ஐடி கம்பெனி ஆகியோர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.



இதில் சாலையில் வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள் அட்டை மற்றும் சாக்லெட்கள் வழங்கப்பட்டன.



ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு கார்டுகளையும் தந்தனர்.



இதில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் எமன் போல வேடமிட்டு கையில் பாசக்கயிறுடன் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு உயிர் இழக்க வேண்டும் என்னுடன் மேலே வந்துவிட வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகள் கையில் பதகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...