உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர் மண்டலம், கோவை மண்டல இணை இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை அலுவலகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பொதுபோட்டி- முன்னுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம்வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப தகுதியாக இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பிரதேசத்தில் ஈப்பு வாகனம் ஓட்டிய அனுபவம் தேவை.

இப்பதவிக்கான வயது வரம்பு 1.7.2016 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 18, அதிகபட்சமாக 35, பழங்குடியினர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சமாக 35, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சம் 32, பிற்படுத்தப்பட்டவர் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இது தவிர மேலும் பிறபிரிவனர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பதவிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வரும் 31.3.2017ம் தேதிக்குள் மண்டல இணை இயக்குநர், உள்ளாச்சி நிதித் தணிக்கை துறை, 4-வது தளம், மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடம், டவுன்ஹால், கோவை- 641001 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...