தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை கோரி இந்து மகா சபையினர் ஆட்சியரிடம் மனு

சட்டத்திற்கு  எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், நடிகர் கமலஹாசன் நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதில் கமலஹாசன் தமிழக அரசியல் சட்டத்திற்கு  புறம்பான வகையில் பேசி தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், மக்களால் தேர்தெடுக்கபட்ட சட்ட மன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் அரசியலில் உள்ள நபர்களால் என்று அவர் கூறியுள்ள கருத்தை ஏற்கமுடியாது எனவும், திரைபடம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் உள்நோக்கதுடன் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...