சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை..!

கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்குவது சிறுவாணி நதி. கடந்த சில நாட்களாக சிறுவாணியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

தொடர்ந்து, அணையில் இருந்து நீர் உறிஞ்சும் வால்வுகளுக்கும் கீழே நீர்மட்டம் சென்றது. இதனால் கோவையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தொடர்ந்து அத்யாவசியப் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாததால் ஆங்காங்கே பொதுமக்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோவை மாநகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் லேசான மழை பெய்த்தது. இந்த கோடை மழை தொடரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்து மீண்டும் வெயிலின்  தாக்கம் அதிகரித்து வருகிறது.

கோவை, நீலகிரி, வால்பாறை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும், சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மாநகரில் கோடை மழை பெய்த போது, சிறுவாணி பகுதியிலும் மழை பெய்யும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தோம். ஆனால், சிறுவாணி ஆறு உற்பத்தியாகும் இடங்களிலோ, அல்லது நீர்பிடிப்பு பகுதிகளிலோ மழை பொழிவு இல்லை. அணையிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது'. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...