தில்லி ஜெ.என்.யு. மாணவர் தற்கொலை குறித்து மத்திய அரசு நடவடிக்கை கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று (மார்ச் 13) திடீரென முத்துகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தில்லி ஜெ.என்.யு-வில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதனிடையே, கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதைத் தொடர்ந்து அலுவலக வாயில் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாயில் முன்பு அமர்ந்த மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜாதிய கட்டமைப்பு காரணமாகவே இவ்வாறு தற்கொலைகள் தொடர்ந்து வருவதாக தெரிவித்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தெரிவித்தனர்.



இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...