கோவையில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம்!

கோவை கிழக்கு மண்டலத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியுள்ள இடத்தின் குப்பையை சட்டவிரோதமாக தெருக்களில் கொட்டியதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.4 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.


கோவை: கோவையில் சட்டவிரோதமாக தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவது தொடா்பாக மாநகராட்சி பணியாளா்களால்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌ கடந்த 30.08.2023 அன்று கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.50க்கு உட்பட்ட ஹிந்துஸ்தான்‌ கல்லூரி பின் பகுதியில்‌ அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்‌ நிறுவனத்தில்‌ 200 மேற்பட்டோர்‌ தங்கியுள்ளனர்‌.

அவர்களிடமிருந்து உருவாகும்‌ குப்பைகளை மீனா எஸ்டேட்‌ மற்றும்‌ ஹிந்துஸ்தான்‌ அவென்யூ பகுதிகளில்‌ கொட்டியது கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவின் படி, சுகாதார ஆய்வாளர்‌ ஜீவமுருகராஜ்‌ சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம்‌ அபராதமாக விதிக்கப்பட்டு, வங்கி வரைவோலையாக இன்று (04.09.2023) பெறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌, வணிக நிறுவனத்தினர்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, அதற்கென தனியே வைக்கப்பட்டுள்ள குப்பைத்‌ தொட்டிகளில்‌ போடுமாறும்‌, இதனை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...