சுங்கம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு!

சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அங்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவியர்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்ச்சியாக சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஆதிதிராவிட மாணவியர்கள் விடுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.



மேலும் அங்குள்ள உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் உட்பட பல உடன் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...