குண்டடம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

வறட்சி காரணமாக குண்டடம் சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகமான காணப்பட்டது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மாடுகள், இந்த வாரம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


திருப்பூர்: கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் மாடுகளின் விலை குறைந்துள்ளதாக வியபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மாட்டு சந்தைக்கு குண்டடம், காங்கயம், கோவை, உடுமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

கேரளா, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்கின்றனர். தவிர விவசாயிகளும் வந்து வளர்ப்பு மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 7 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது வறட்சி காரணமாக விலை குறையத்தொடங்கி இருப்பதால் கறவை மாடுகளின் விலையும் குறைந்து வருகிறது.

குண்டடம் மாட்டு சந்தையில் நேற்று 7 முதல் 10 லிட்டர் பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.40ஆயிரம் வரையே விலை போனது. அதே நேரத்தில் அடிமாட்டுக்கு போகும் கன்றுகளின் விலையில் பெரிய மாற்றமில்லை. 20 கிலோ உள்ள கன்றுகள் ரூ.3 ஆயிரம் வரை விலை போயின. நேற்று மட்டும் சந்தைக்கு சுமார் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. மாடுகள் மற்றும் கன்றுகளில் பெரும்பாலானவை விற்றுவிட்டன.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...