கோவையை வண்ணமயமாக அலங்கரித்த வடமாநில ஹோலி

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை கோவையில் வசிக்கும் வடமாநில மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரக்கன் இரன்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா எரித்து கொல்லப்பட்ட நிகழ்வை வசந்த கால வரவாக வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நாளில் வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் வீசியும் பூசியும் மக்கள் மகிழ்வது வழக்கம்.

இதன் படி கோவையில் வசித்து வரும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வண்ண வண்ண பொடிகளை தூவியும், இந்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியும் இந்த பண்டிகையை கொண்டாடினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இம்முறை தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் வண்ண பொடிகள் மற்றும் மலர்களை தூவி மட்டும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...