வால்பாறையில் 61 பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் துவக்கம்!

வால்பாறையில் உள்ள 61 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி போன்ற விதவிதமான உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் உள்ள 61 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 89 பள்ளிகள் உள்ளன. இதில் 61 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 1,110 மாணவ மாணவிகள்படித்து வருகின்றனர், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் இன்று முதல் துவக்கப்பட்டது.



இந்த நிலையில் வால்பாறை நகராட்சி சார்பாக 61 பள்ளிகளுக்கு 4 மையங்கள் அமைத்து 12 வாகனங்களில் மூலமாக உணவுகள் விநியோக செய்யப்படுகிறது, இதில் இன்று காலை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருக்கும் காலை உணவு திட்ட வளாகத்தில் இருந்து உணவுகள் கொண்டு செல்லப்பட்டது.



காலையில் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித உணவுகள் பள்ளி குழந்தைகளுக்குவழங்கப்படும். இந்த உணவு காலை எட்டு முப்பது மணி அளவில் பள்ளிகுழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் பள்ளி நிர்வாக தலைவர் இதற்கு பொறுப்பு ஏற்று நிர்வாகத்தை செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் புறநகர் பகுதியான பெரிய கல்லார், சின்னக் கல்லார், சின்கோனா, ஊபாசி, சக்தி தலனார், வாட்டர் பால்ஸ், காடம்பாறை, குரங்குமுடி, உறுளிக்கள் ஆகிய 15 பள்ளிகளுக்கு பள்ளி நிர்வாகமே காலை உணவு தயார் செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சுதாகர், மற்றும் நகர துணை தலைவர் தா.மா.செந்தில், மற்றும் 10 வாது வார்டு உறுப்பினர் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...