விவசாயத்திற்கான தண்ணீரை மோட்டர் மூலம் உறிஞ்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நீரின் மூலமே அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. 

தற்போது சுத்திகரிப்பு செய்யபட்டு வெளியேற்றப்படும் கழிவு நீரை சிலர் தடுப்பணை கட்டி அனுமதியில்லாமல் மின் மோட்டர் மூலம் தண்ணீரை உறிஞ்சி செங்கல் சூழைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டி மின் மோட்டர் மற்றும் சோலார் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் எடுத்து தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...